தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு
Recommended Video
சென்னை: தடையற்ற வர்த்தகத்துக்கான மண்டல பொருளாதார ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுத்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இதேநிலை நீடிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
டெல்லியில் வரும் ஜனவரி மாதத்தில் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டுக்கான மாநாட்டிற்காக ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் தன்திறமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மாநில மொழிகளை புறக்கணித்து, இந்தியில் தான் அறிக்கை தர வேண்டும் என்பது இந்தியை வெளிப்படையாக திணிக்கும் செயல் என்பதைத் தவிர வேறல்ல!
தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியர் ஒருவர் அலுவலகத்திலேயே தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனைவருமே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் நாடு என்னவாகும் என நினைக்கவே அச்சமாக உள்ளது. அதிகாரிகளுக்கு கடமையும், மக்களுக்கு பொறுமையும் மிகவும் அவசியம்!

பிரதமர் மோடிக்கு பாராட்டு
தடையற்ற வணிகத்திற்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த மண்டல பொருளாதார ஒப்பந்தம் (RCEP) இந்திய உழவர்கள், தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது என்று கூறி, அதில் கையெழுத்திட பிரதமர் மறுத்திருப்பது பாராட்டத்தக்கது. இதேநிலை நீடிக்க வேண்டும்!
நீட் விவகாரம்
நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வணிகமாக மாறியிருக்கிறது. தனிப்பயிற்சி நிறுவனங்களின் காட்டில் பணமழை பெய்ய வேண்டும் என்பதற்காக அப்பாவி ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவுகள் பலி கொடுக்கப் படுகின்றன. வாழ்க வணிகமயம்!
நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் மிகவும் சரியானவை; நியாயமானவை. இவை ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்டவை. நீட் தேர்வும், மருத்துவக் கல்வியும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது நிரூபிக்கப்பட்ட பிறகும் நீட்டை நீட்டித்துக் கொண்டே செல்வது நியாயமா?
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications