Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்புவனம் சம்பவமே அரசியல் டிராமாவா என சந்தேகம் வருது.. பாஜக மீது லைட்டை திருப்பிய டாக்டர் ஷர்மிளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கஸ்டடி கொலை வழக்கில் புகார் கொடுத்த நிக்கிதாவின் பின்னணி தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார் டாக்டர் ஷர்மிளா. மதுரையை மையமாக வைத்து பாஜக நடத்தும் அரசியல் டிராமாவாக கூட இது இருக்கலாம் என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஷர்மிளா.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Dr Sharmila Questions Credibility of Complainant in Ajith Kumar Case Alleges BJP-Backed Political Drama

யார் இந்த நிக்கிதா?

அஜித் குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில், புகார் அளித்த நிக்கிதா குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள். இவர் மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிக்கிதா முனைவர் பட்டம் பெற்றவர்; திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியையாக உள்ளார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

நிக்கிதா, அவரது தாயார் ஆகியோர், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மோசடி புகார்களும் நிக்கிதா மீது அளிக்கப்பட்டுள்ளன.

பயங்கர மோசடி

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிக்கிதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் நகை திருட்டு என்ற புகார் கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிக்கிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாக்டர் ஷர்மிளா சந்தேகம்

இந்நிலையில், நிக்கிதாவின் பின்னணி தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார் டாக்டர் ஷர்மிளா. மதுரையை மையமாக வைத்து பாஜக நடத்தும் அரசியல் டிராமாவாக கூட இது இருக்கலாம் என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஷர்மிளா.

டாக்டர் ஷர்மிளா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிக்கிதா மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவராம். முன்னாள் துணை முதலமைச்சர் தனக்கு நெருக்கம் என்று சொல்லி பல பேரிடம் பண மோசடி செய்திருக்கிறாராம். ஐஏஎஸ் அதிகாரி , காவல்துறை உயரதிகாரி என்று பலருடன் இவருக்கு நெருக்கம் இருக்கிறது.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி மூலம் எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். காவல்துறையில் பல கருப்பு ஆடுகள் சங்கி ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்கள் என்று பலமுறை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

பாஜகவின் டார்கெட் மதுரை

சமீபகாலமாக சங்கிகளின் டார்கெட் 'மதுரை'.. தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து காய் நகர்த்துகிறது பாஜக. நிகிதா தலைமறைவு... இந்த வழக்கை relevant ஆக வைக்க எதிர்கட்சிகள் காட்டும் ஆர்வம்.. 'நடுநிலையாளர்களின்' நரேட்டிவ் , கோதி மீடியா கொடுக்கும் தேசிய அளவிலான ஊடக வெளிச்சம்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த நகைத்திருட்டு என்பது ஏன் ஒரு well - orchestrated அரசியல் - டிராமாவாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தான் வருகிறது. சங்கிகள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+