ஆபரேஷன் பண்ணி நாளாயிடுச்சே.. செந்தில் பாலாஜி ஏன் டிஸ்சார்ஜ் இல்லை? கேட்பது ஷியாம் கிருஷ்ணசாமி
சென்னை: செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட காவேரி மருத்துவமனைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Bill ஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா என ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அரசுப் பணத்தில் செந்தில்பாலாஜிக்கு மட்டும் சிறப்புச் சிகிச்சையா என விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவருக்கு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவு மூலம் காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். அங்கு 8 நாட்கள் ஓய்வில் இருந்த அவருக்கு ஜூன் 21ஆன் தேதி அதிகாலை இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது காவேரி மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு மீதான விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. இன்னும் 3 நாட்கள் கழிந்தால் வரும் 14ஆம் தேதியுடன் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு மாதம் நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications