Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கை" வைங்க பார்ப்போம்.. சூர்யாவை தொட்டால் அவ்வளவுதான்.. பாமக மீது திராவிடர் விடுதலை கழகம் புகார்

பாமகவினர் மீது திராவிடர் விடுதலை கழகம் போலீசில் புகார் தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.

இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

விளக்கம்

விளக்கம்

ஆனாலும் இன்னும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

பரிசு

பரிசு

"ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்.. இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்.. சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

அதேபோல, "நடிகர் சூர்யா நடித்து வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம்" என்று காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சூர்யாவுக்கு இப்படி தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நிலையில்தான், திராவிடர் விடுதலை கழகம் சூர்யாவுக்கு சப்போர்ட்டுக்கு வந்துள்ளது. சூர்யாவை தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்மண்டல காவல்துறை தலைவர் அன்புவை சந்தித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.

சவால்

சவால்

நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி மீதும், சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம் என பேசிய காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மீதும், அதை தூண்டும் வகையில் செயல்படும் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணியமுதன் சொல்லும்போது, நடிகர் சூர்யா மீது விடுக்கப்படும் மிரட்டல் தமிழ்நாட்டுக்கு விடுக்கப்படும் சவால் எனவும், நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்றார்.

Recommended Video

    எனக்கு அந்த அவசியமும் இல்லை | Anbumani-கு பதிலடி கொடுத்த Suriya | JaiBhim | Oneindia Tamil
     திராவிடர் கழகம்

    திராவிடர் கழகம்

    சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டும், டைரக்டர் ரஞ்சித் உள்ளிட்ட ஒருசிலர் தவிர, முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் யாருமே அதற்கு கண்டனம் தெரிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகளும் பெரிதாக அந்த மிரட்டலை கண்டுகொள்ளாத நிலையில், திராவிடர் விடுதலை கழகம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதரவை தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+