சென்னை அழைத்து வரப்படும் போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் தலைகள்!
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படலாம் என தெரிகிறது.
டெல்லி, தமிழகம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் போதை பொருட்களை கடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி போதை பொருள் வழக்கில் கைதான 3 பேரின் தகவலை அடுத்து ஜாபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று டெல்லியில் வைத்து ஜாபரை கைது செய்தோம்.

போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.
போதை பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து மங்கை என்ற படத்தை தயாரித்துள்ளார். உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு போதைக் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை ஜாபர் வழங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுவரை திருவனந்தபுரம், மும்பை ஜெயப்பூரில் பதுங்கியிருந்துள்ளார். போதை பொருள்களை கடத்தியதன் மூலம் சம்பாதித்த பணத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்துள்ளார். விசாரணைக்கு பிறகு ஜாபருடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடுவோம்.
சர்வதேச கும்பலுடனும் ஜாபருக்கு தொடர்பிருக்கிறது. தமிழகத்தில் சினிமா பிரமுகர்களுடனும் சாதிக்கிற்கு தொடர்பிருப்பதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் 2019ஆம் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயனடைந்தவர்கள் பட்டியலை தனித்தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு போதை பொருள் வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் பட்டியலை அதிகாரிகள் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications