சிக்கிய போதைப்பொருள் சப்ளையர் பயாஸ் அகமது.. நடிகர்களுக்கு டிரக் சப்ளை செய்த வழக்கில் மீண்டும் கைது!
சென்னை: சென்னை சூளைமேட்டில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டிரக் சப்ளையர் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தொடர்புடைய போதைப் பொருள் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். காவல் துறை தரப்பில் இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப் பொருள் சப்ளை செய்த பிரதீப் குமாரிடம் நடத்திய விசாரணையில், பயாஸ் அகமது என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை சூளைமேட்டில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாஸ் அகமது, போதைப்பொருள் சப்ளையராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் பலரும் போதைப்பொருட்களை சப்ளை செய்திருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
பயாஸ் அகமது - பிரதீப் குமார் இருவருக்கும் இடையே போதைப் பொருள் தொடர்பான தகவல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள், செல்போன் உரையாடல்கள் பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications