எங்க அப்பா யாரு தெரியுமா.. போதையில் காரை ஓட்டி வந்த நபர் அலப்பறை.. நைசாக பேசி போலீஸ் செய்த சம்பவம்
சென்னை: சென்னை நந்தனத்தில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த இளைஞர், போலீசாரிடம் மிரட்டும் தொனியில் என் அப்பா யார் தெரியுமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இரவு நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்கள் அதிகம் நடப்பதை காண முடிகிறது. அவ்வப்போது சில இளைஞர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக மின்னல் வேகத்தில் பைக்கில் சீறிப்பாய்வது.. மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்வது என போக்குவரத்து விதிமீறல்களில் சில வாகன ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மோட்டார் வாகன விதிகளை இஷ்டத்திற்கு மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசார் முக்கியமான சாலைகளில் நின்று வாகன ஓட்டிகளை கண்காணிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று சென்னை நந்தனம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய நபர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீசார் கேட்ட போது, அந்த நபர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஹூ ஆர் யூ மேன்.. என இஷ்டத்திற்கு செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி கேமராவை தட்டி விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூலாக சிரித்தபடியே.. இதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த அந்த நபரிடம் போதையில் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்தனர்.

ஆனால், நான் தான் அபராதம் கட்டிவிட்டேனே.. காரை எடுத்துட்டு போறேன் என போலீசாரிடம் அடம் பிடித்தார். போலீசாரோ.. அப்படியெல்லாம் போக முடியாது.. கார் சாவியை கொடுங்கள் என கெஞ்சாத குறையாய் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், அந்த நபரோ, என் அப்பா யாரு தெரியுமா.. டிபென்ஸ் ஆபிசர் என போலீசாரை மிரட்டும் விதமாக பேசினார்.
தொடர்ந்து விசாரித்ததில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த அந்த நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராபின் சிங் என்பதும் நட்சத்திர ஓட்டலில் பார்ட்டியில் கலந்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்த பிறகு ஆட்டோவை பிடித்து அந்த நபர் வீட்டிற்கு கிளம்பினார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications