வைகோ மகனின் 7 வருடக் கனவு! 3 வருட முயற்சி! 1 வருட உழைப்பு! 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் தயார்!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பற்றிய ஆவணப்படம் 'மாமனிதன் வைகோ' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
வைகோ மகன் துரையின் 7 வருடக் கனவு, 3 வருட முயற்சி, 1 வருட உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று சென்னையில் வைத்து வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
'உளவுத்துறை போலீஸ் பேசுறேன்.. புகார் வருது.. ஜப்தி பண்ணிருவோம்’- 7 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர் கைது!
வைகோ ஆவணப்படம்
அரசியல் பொதுவாழ்வில் வைகோ அடியெடுத்து வைத்து 56 ஆண்டுகள் ஆகிய நிலையில் 'மாமனிதன் வைகோ' என்ற பெயரில் அவர் குறித்து வரலாற்று ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரை தமிழக உரிமைகளுக்காகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் வைகோ குரல் கொடுத்து முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ மகன்
தனது தந்தை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது துரை வைகோவின் 7 வருடக் கனவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்றாண்டுக் கால முயற்சியில் ஒரு வருட உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மேலும், அந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் துரை வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.
வரலாற்றுச் சிறப்பு
இந்தி எதிர்ப்பு போராட்டம், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம், காவிரி நதி நீர் உரிமை பாதுகாப்பு நடைபயணம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம், மூவர் தூக்குக்கு தடை பெற்றது, நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மதுவிலக்கு நடைபயணம், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு, என வைகோ தம் பொதுவாழ்வில் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
துரை வைகோ
துரை வைகோ உருவாக்கியுள்ள 'மாமனிதன் வைகோ' ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலும் மதிமுகவையும், வைகோவையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் துரை வைகோ.