Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! கட்டடமே கட்டாமல் கணக்கு காட்டி மோசடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018-19ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கு மாம்பலத்தில் கட்டடம் கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் முறைகேடு செய்ததாகவும் புதிதாக கட்டடமே கட்டாமல் ஏற்கனவே இருந்த கட்டடத்தை சீரமைத்துவிட்டு புதிதாக கட்டியதுபோல் கணக்கு காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DVAC filed a case against former AIADMK MLA T Nagar Sathya

மேலும், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோடம்பாக்கத்தில் 3 இடங்களில் தரமற்ற கட்டிடங்களை கட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் தி.நகர் சத்யா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 36 லட்சம் நிதி மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 11 பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா, சென்னை பெருநகர மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் இளங்கோவன், மணி ராஜா, ராதாகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் பெரியசாமி, முன்னாள் மண்டல அலுவலர் நடராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தி.நகர் சத்யா கடந்த 2016 முதல் 2021 வரை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதற்கு முன்னதாக கடந்த 2011 முதல் 2016 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக செயல்பட்டார். 2021லும் தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட சத்யா வெறும் 137 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்டார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+