Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! 

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமாக தங்கம் அல்லது சொத்துக்கள் உள்ளதா? சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அடுத்த நோட்டீஸ் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டுமானால், இந்த ஒரு முக்கிய விதியை இன்றே சரிபார்க்கவும்.. இல்லையெனில் உங்கள் சொத்து மதிப்பில் 60% பறிபோகும் அபாயம் உள்ளது.. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

வருமான வரித்துறையின் தற்போதைய விதிமுறைகளின்படி ஒரு தனிநபர் எவ்வளவு சொத்துக்களை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு நேரடியான உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை..

சொத்து எவ்வளவு வைத்திருக்கலாம்

அதாவது, ஒரு குடிமகன் தனது வருமானத்திற்கான முறையான ஆதாரங்களை சமர்ப்பித்து, அதற்குரிய வருமான வரியைச் சரியாகச் செலுத்தும் பட்சத்தில், அவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களைத் தாராளமாக தனது பெயரில் வைத்திருக்க முடியும்..

இதில் நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிகக் கட்டிடங்கள், தங்கம், வெள்ளி, வங்கிக் காசோலைகள், பங்கு முதலீடுகள், மியூச்சுவல் பண்டுகள் போன்ற பல்வேறு சொத்துக்கள் அடங்கும்..

வருமான வரித்துறை

ஆனால் ஒருவருடைய சொத்து மதிப்பு அவரது ஆண்டு வருமானத்தை விடப் பல மடங்கு உயரும்போது, அந்த சொத்துக்களை வாங்குவதற்கான பணப் பரிமாற்றம் எப்படி நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யக்கூடும்..

குறிப்பாக தற்போது பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல், வங்கிக் கணக்குகளில் நடைபெறும் பணமாற்றங்கள், பான் மற்றும் ஆதார் இணைப்பு போன்ற தகவல்கள் அனைத்தும் மையமாக கண்காணிக்கப்படுவதால், கணக்கில் வராத பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்குவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது..

நிலம் அல்லது வீடு வாங்கும் போது பதிவுத்துறை, வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறுவதால், பெரிய அளவிலான சொத்து பரிவர்த்தனைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு எளிதாக வந்து விடுகின்றன..

அசையா சொத்துக்கள்

அசையா சொத்துக்களைப் பொறுத்தவரை, நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.. மாநிலத்துக்கு மாநிலம் இந்த வரம்பு மாறுபடும்.. ஆனால் நகர்ப்புறங்களில் வீடு, அபார்ட்மெண்ட் அல்லது வணிகக் கட்டிடங்களை எத்தனை வேண்டுமானாலும் ஒருவர் வாங்குவதற்கு பொதுவாக எந்தத் தடையும் இல்லை.. இருப்பினும் அந்த சொத்துக்களின் வாங்குதல் தொடர்பான பணத்தின் மூலாதாரம் சட்டபூர்வமாக இருக்க வேண்டும்..

ஒருவருக்குச் சொத்து மதிப்பு வருமானத்தை விட அதிகமாகும் போது, முதலில் செய்ய வேண்டியது அந்தச் சொத்துக்களுக்கான வரித் தாக்கல் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதாகும்.. ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டும்போது, சாதாரண வரியுடன் கூடுதலாக 'சர்சார்ஜ்' எனப்படும் கூடுதல் வரியும் விதிக்கப்படலாம்..

சொத்து மதிப்பு

மேலும் வாரிசுரிமை மூலம் கிடைத்த சொத்துக்கள், பரிசாக பெற்ற சொத்துக்கள், அல்லது குடும்பப் பிரிவினை மூலம் கிடைத்த சொத்துக்கள் ஆகியவற்றிற்கான பத்திரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம்..

ஒருவேளை கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.. எனவே சொத்து மதிப்பு அதிகரிக்கும் போது ஒரு தணிக்கையாளர் அல்லது வரி ஆலோசகரின் உதவியுடன் சொத்து விவரங்களை சரிபார்த்து, ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் தாக்கலை முறையாகச் செய்வது சட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்..

மொத்தத்தில் பார்த்தால், முறையான ஆவணங்கள், சரியான வரி செலுத்துதல் மற்றும் சட்டபூர்வமான வருமான ஆதாரங்கள் இருந்தால், ஒருவர் தனது உழைப்பில் ஈட்டிய எவ்வளவு பெரிய சொத்தையும் இந்திய சட்டத்தின் கீழ் எந்த அச்சமுமின்றி வைத்திருக்க முடியும் என்பதே உண்மை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+