மின் கணக்கீட்டில் குளறுபடி..? மின் கணக்கீட்டாளர்களுக்கு வார்னிங் கொடுத்த மின் வாரிய தலைவர்
சென்னை: சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின் கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பல மடங்கு மின் கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மீட்டரின் டிஸ்பிளே பழுதாகி இருந்ததாகவும், அப்படி இருக்கும்பட்சத்தில் கடந்த முறை வந்த மின் கட்டணத்தையே செலுத்தவே அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் கணக்கீட்டாளர் தானாக அளவீடுகளை குறிப்பிட்டதால் அதிகமான கட்டணம் வந்துள்ளது. இதையடுத்து அந்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு சரியான மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மின் கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மின் வாரிய பணியாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "ஆய்வுக் கூட்டங்களின்போது மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் வருகின்றன. வீட்டு இணைப்பு, வணிக மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கான இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் குறை இருந்தால் அதனை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல், நுகர்வோருக்கு உதவி செய்து பணிகளை முடிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் விண்ணப்பங்களும் முடிக்கப்படாமல் இருப்பதாக குற்றாச்சாட்டு உள்ளது. அதனை விரைவாக சரி செய்ய வேண்டும்.
மேலும் அமலாக்க பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது ஒரு சில இடங்களில் ஒழுங்கின்மை கண்டுபிடிக்கப்படுட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது. பணியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications