ஆவடியில் ஆசை ஆசையாய் கட்டிய புதிய வீடு.. கிடைக்காத இபி கனெக்சன்.. விசாரித்தால் ட்விஸ்ட்
சென்னை: சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பொன்னம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராகவன் என்பவர் புதிதாக 2 அடுக்குமாடி கொண்ட வீட்டை கட்டியிருக்கிறார். அதில் இரண்டு கடைகளும் கட்டியிருக்கிறார். அதில் 4 மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெற மின் வாரிய அதிகாரி 15000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மின் வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெற யாராவது லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். ஆனால் மக்கள் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். நமக்கு ஏன் இந்த வம்பு என்று பலர் ஒதுங்கி செல்வதும், பிரச்சனை வேண்டாம் கேட்கும் பணத்தை கொடுப்போம் என்று நினைப்பதும் அதிகமாக இருக்கிறது.

அதேபோல் 4 நாளில் முடிய வேண்டிய வேலையை ஒரே நாளில் முடிக்க சிலர் லஞ்சம் தருவதும் தொடர்கிறது. இதுவே லஞ்சம் குறையாமல் இருக்க காரணமாக இருக்கிறது. அதேநேரம் ஒரு சிலர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்கிறார்கள். அப்படியான புகாரில் ஒரு மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை பொன்னம்பிள்ளை நகரைச் சேர்ந்த 50 வயதாகும் ராகவன் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக 2 அடுக்குமாடி கொண்ட வீட்டை கட்டியிருக்கிறார். அதேநேரம் ராகவன் தனது வீட்டின் கீழ் தளத்தில் 2 கடைகளும் கட்டியிருக்கிறார்.
ராகவன் புதிதாக கட்டியுள்ள கடை மற்றும் வீடு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 4 மின் இணைப்புகள் வேண்டி ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அங்கு ராகவனின் வீட்டுக்கு மின் இணைப்பு தராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே ராகவன், மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த வருவாய் மேற்பார்வையாளரான சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணி (47) என்பவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்போது பாலசுப்பிரமணி, புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராகவன், இது குறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மின்வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ராகவனிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்று மதியம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற ராகவன், லஞ்ச பணத்தை பாலசுப்பிரமணியிடம் கொடுத்திருக்கிறார். அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பாலசுப்பிரமணியை கையுங் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications