பேராயர் எஸ்றா சற்குணம் உடல் நலக்குறைவால் காலமானார்!
சென்னை: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா (ECI) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா (ECI) பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இ.சி.ஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86 வது பிறந்தநாளை, கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி கொண்டாடினார். அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 86 வயதில் இன்று மறைந்தார் எஸ்றா சற்குணம்.
மறைந்த பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கானது நாளை நடைபெறும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராயர் எஸ்றா சற்குணம், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர்.












Click it and Unblock the Notifications