நோ தூக்கம்.. பொன்முடியிடம் விடிய விடிய.. ரெடியான அமலாக்கத்துறை! சாஸ்திரி பவனில் தொடங்கிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை விடிய விடிய நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் அலுவலகங்கள் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது. அதை தொடர்ந்து அன்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

ED decided to continue interrogation with Minister Ponmudy till morning

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருக்கும் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.

விழுப்புரம்த்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.

சோதனை தொடங்கும்போது அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரும் வீட்டீலேயே இருந்து உள்ளனர். அவர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

தடயவியல் குழுவினர் பொன்முடி தொடர்புடைய விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. 14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த தீவிர சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பணம், வெளிநாட்டு கரன்சி போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
அதேபோல் பொன்முடி வீட்டில் இருந்த பீரோ சாவி காணாமல்போனதால் மாற்று சாவி தயாரிப்பவர்களை அழைத்து வந்து சாவி செய்து அதில் அமலாக்கத்துறை சோதனையிட்டு உள்ளது.

இந்த நிலையில் 13 மணி நேர தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு சோதனை தொடர்பாக முழு விபரங்கள், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு தகவலும் கிடைத்ததால் அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளார்கள். மற்றொரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் சாஸ்திரி பவனுக்கு சென்றனர். அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த விசாரணை விடிய விடிய நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+