அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.
தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 2002-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அடுத்து அமலாக்கத்துறை வசம் சென்றது. விசாரணை கைமாறிய உடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது.
அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் உட்பட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, சொத்துக்களை முடக்கியது. இந்த விவகாரத்தால் டென்ஷன் ஆன அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடர கூடாது என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அமர்வுக்கு முன்பு வந்தது.
அமலாக்தக்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகியிருந்தார்."வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய கூடாது. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். மட்டுமல்லாது விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications