டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் லீக் ஆனது எப்படி? சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு
சென்னை: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமலாக்கத்துறை, தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு கடிதத்தை இணைத்து பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதிநாராயணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த கடிதம் எப்படி கிடைத்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி திருச்சி வழக்கறிஞர் புரஞ்சோதி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications