சட்டவிரோத பணப்பரிமாற்றப் புகார்.. சென்னையில் 47 இடங்களில் ரெய்டு.. அதிரடி காட்டும் அமலாக்கத்துறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் உள்ள 47 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மைக் காலமாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் யார் வீடுகளில் சோதனைகள் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications