பணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்ஷனை திடீரென நிறுத்திய EPS
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்காத நிர்வாகிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுக்காக மே 2-ம் தேதி வரை அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பல இடங்களில் நடைபெற்றிருக்கும் விவகாரம் இப்போது இ.பி.எஸ்.கவனத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை எனக் கூறி ஆக்ஷனை தீவிரப்படுத்த தொடங்கினார் இ.பி.எஸ்.

அந்த வகையில் சிட்டிங் எம்.எல்.ஏ. என்று கருதாமல் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் உட்பட அவருடன் சேர்த்து 6 பேரை கட்சியில் இருந்து விலக்கியது அதிமுக தலைமை. இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் இருந்து அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என பெரிய புகார் பட்டியல் ஒன்று முதலமைச்சர் இ.பி.எஸ்.க்கு சென்றுள்ளது.
பெரும்பாலான புகார்கள் என்னவென்றால், தேர்தல் செலவுக்கான பணத்தை முறையாக செலவிடவில்லை என்பதும் சீட் கிடைக்காதவர்கள் எதிர்தரப்பினருடன் கரம்கோர்த்தார்கள் என்பதும் தான்.
இதன் மீதான நடவடிக்கை பற்றி ஒருங்கிணைப்பாளர் என்றதன் அடிப்படையில் ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து எந்த பதிலும் இ.பி.எஸ்.க்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், புகார்களின் உண்மை தன்மையை ஆராய்வது பற்றியும் முதலமைச்சர் தரப்பு ஆலோசித்திருக்கிறது.
இதனால் மே 2-ம் தேதி வரை புகார் கடிதங்கள் மீதான ஆக்ஷனை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்த இ.பி.எஸ். தேர்தல் முடிவு-தொகுதிகளின் நிலவரம் பற்றிய ஆலோசனையில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications