கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 400-க்கும் மேல் சென்றுவிட்டது. தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில் தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்க தடையேதும் இல்லை. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக கூடுதலாக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மருத்துவமனையில் 92.406 படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications