விழுந்து விழுந்து படிக்காதீங்க பசங்களா.. 10ஆம் வகுப்புக்கான தேர்வு இப்போதில்லை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முத்ல 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கெனவே எழுதிய அரையாண்டு தேர்வு, முழுஆண்டுக்கு தயாராகும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி கொடுப்பது குறித்து யோசனை செய்து வருகிறது.
எனினும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர் அறிவித்துள்ளார்.
மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9.55 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
11 ஆம் வகுப்புக்கு இன்னும் இரு தேர்வுகளும், 12 ஆம் வகுப்புகளுக்கு இன்னும் ஒரு தேர்வு இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்கான கால அட்டவணையும் பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்பதால் 9 லட்சம் மாணவர்கள் ஒன்று திரள்வது என்பது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் இந்த முடிவை அறிவித்திருக்கலாம் என தெரிகிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications