விழுந்து விழுந்து படிக்காதீங்க பசங்களா.. 10ஆம் வகுப்புக்கான தேர்வு இப்போதில்லை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முத்ல 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கெனவே எழுதிய அரையாண்டு தேர்வு, முழுஆண்டுக்கு தயாராகும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி கொடுப்பது குறித்து யோசனை செய்து வருகிறது.
எனினும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர் அறிவித்துள்ளார்.
மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9.55 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
11 ஆம் வகுப்புக்கு இன்னும் இரு தேர்வுகளும், 12 ஆம் வகுப்புகளுக்கு இன்னும் ஒரு தேர்வு இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்கான கால அட்டவணையும் பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்பதால் 9 லட்சம் மாணவர்கள் ஒன்று திரள்வது என்பது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் இந்த முடிவை அறிவித்திருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications