Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரனை பார்த்ததும்.. கைகுலுக்கிய எடப்பாடி.. நட்பாக சிரித்த வேலுமணி.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று பிரதமர் மோடியை அதிமுக எஸ்.பி வேலுமணி மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றனர்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த மேடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகத் தோன்றவுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

aiadmk ttv dinakaran edappadi palanisamy

மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக - பாஜக கைகோர்த்துள்ளன. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக (T.T.V. தினகரன்), தமாகா (ஜி.கே. வாசன்), ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 21, 2026 அன்று டி.டி.வி. தினகரனின் அமமுக இக்கூட்டணியில் இணைந்தது. இன்று மதுராந்தகத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் இக்கூட்டணி தனது பலத்தைக் காட்டவுள்ளது.

மோடி தமிழ்நாடு வருகை

சென்னை விமான நிலையத்துக்கு சற்று முன் பிரதமர் மோடி வந்தடைந்தார். ஆளுநர் ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் பிரதமருக்கு வரவேற்பளித்தனர். அதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுராந்தகத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். சற்று நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முக்கியத் தலைவர்கள் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர். 20 நிமிட பயணத்திற்கு பின்பே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்பதற்காக பிரமதர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தடைந்தார்.

மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார்

தேஜகூ பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கியத் தலைவர்கள் பலர் வருகை புரிந்துள்ளனர். டிடிவி தினகரனும், எஸ்.பி.வேலுமணியும் பரஸ்பர வணக்கம் செலுத்திக் கொண்டனர். இதற்கு இடையே மதுராந்தகத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மழைக்கு நடுவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கியது. ஜிகே வாசனைத் தொடர்ந்து, அண்ணாமலை உரையாற்றி வருகிறார். மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். இவர்கள் இருவருக்கும் இடையில் பல மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில்.. இன்று ஒன்றாக கரம் கோர்த்துள்ளனர்.

அண்ணாமலை பேச்சு

இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசுகையில், கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம். மழை பெய்கிறது. மழையால் தாமரை, இலை மலரும். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு கூடியுள்ளோம்.

திமுகவுக்கு செல்லும் வாக்குகள் தீய சக்திக்கு செல்லும் வாக்குகள். அதனைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. லஞ்சம் இல்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. தற்போது இங்கே சூரியன் மறைந்துவிட்டது. இது திமுக என்னும் தீய சக்தியின் தோல்வியின் அறிகுறி. அதற்கான அடையாளம்தான் இந்த சூரிய மறைவு என்று அண்ணாமலை பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+