எல்லா "பாக்ஸையும்" டிக் அடித்த எடப்பாடி.. அடுத்த போகஸ் இதுதான்.. "அவரை" உள்ளே இழுக்க போகிறாராமே
சென்னை: பாஜக கூட்டணி முடிவு, உட்கட்சி மோதல்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் அடுத்த முக்கியமான முடிவு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி எடுத்து உள்ளாராம்.
அதன்படி அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாராம். ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.

இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். அதேபோல் ஐபேக் நிறுவனம் வேறு யாருடனும் செல்ல கூடாது என்பதால் அவர்களுடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.
விஜய் கையில் 2 பேர்
இது போக ஐபேக்கில் இருந்து வெளியாகி உள்ள பிரஷாந்த் கிஷோர் விஜய் உடன் நெருக்கமாக உள்ளார். அதேபோல் விஜய்க்கு பின் அதிகாரபூர்வ ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
எடப்பாடி ஒப்பந்தம் செய்ய போவது யார்?
இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாராம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக கடந்த லோக்சபா தேர்தலில் 10வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது. இதன் காரணமாக டெல்லியை சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பேசி வருகிறாராம். வடமாநிலங்களில் சில தேர்தல்களில் பணியாற்றிய அவர் பாஜக வழியாக அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications