தேமுதிக பரம்பரையில் ஒரு எம்.பி! ராஜ்யசபாவுக்கு செல்கிறார் LK சுதீஷ்.. பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி!
சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆகும் காலம் கனிந்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதிமுகவின் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதிமுக - தேமுதிக
2024 மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி இடம் தருவதாக அதிமுக உறுதியளித்தது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் அப்படி எல்லாம் எந்த உறுதியும் தரப்படவில்லை என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் இன்று சந்தித்து பேசினார்.
எடப்பாடி உடன் சுதீஷ் சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தேமுதிக சுதீஷ் சென்று, ஈபிஎஸ்ஸை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தர வேண்டும் என சுதீஷ் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படுவது உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாள்களாக நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது சுதீஷ் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீட் தர எடப்பாடி ஒப்புதல்
மேலும், தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டால், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதீஷுக்கு தான் சீட் என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவாகிகிவிட்டது.
சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எல்.கே.சுதீஷ், "தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தார்கள். இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன். அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை." எனத் தெரிவித்திருந்தார்.
யார் இந்த எல்.கே.சுதீஷ்?
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி எல்.கே.சுதீஷ். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். பின்னர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல் அவருக்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வந்தார்.
2005-ல் தென்சென்னை மாவட்டத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஆக நியமிக்கப்பட்டார் எல்.கே.சுதீஷ். 2006 சட்டப்பேரவை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலுக்கு பின் சுதீஷை இளைஞர் அணி செயலாளராக நியமித்தார் விஜயகாந்த். 2009 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியிலும், 2014 லோக்சபா தேர்தலில் சேலத்திலும் போட்டியிட்டார்.
தேமுதிகவின் முதல் ராஜ்யசபா எம்.பி
கடந்த 2017-ல் தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019-ல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தேமுதிகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் சுதீஷ். கடந்த 2006 முதல் பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள சுதீஷ், 2009, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்ல இருக்கிறார் சுதீஷ்.
தேமுதிகவின் முதல் எம்.பி
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்றிருந்தது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தால் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரித்தனர்.
இதனால் தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்றைய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தேமுதிக சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா வாய்ப்பும் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.
இத்தனை ஆண்டு காலமாக எம்.பி பதவி என்பது எட்டாத கனவாகவே இருந்து வந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல இருக்கிறார் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ்
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications