உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி
சென்னை: அதிமுக முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை பல்ஸ் பார்க்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக ஆலொசனை கூட்டத்தை நடத்த தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்திலேயே மிதுன் பழனிசாமியை தொண்டர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று வெளிக் காட்டவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சித் தலைமைக்கு எதிராகச் மூத்த தலைவர்கள் சைலண்ட்டாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சி மற்றும் தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்களா என்பதை கணிக்க எடப்பாடி மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டத்தை நடத்த தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் பொதுக்குழு கூட்டினால் யாருக்கு ஆதரவு இருக்கும் என்று தெரிந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
பொதுக்குழுவைக் கூட்டினால் அதிருப்தி தலைவர்களால் சலசலப்பு ஏற்படும். இதனால் தனது தலைமைக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் மாவட்ட வாரியாகப் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசி வருகிறார். முதற்கட்டமாகக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் விரிவான ஆலோசனையை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களின் மூலம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் தனது முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இந்த மாவட்ட வாரியக் கூட்டங்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான ரகசிய திட்டமும் அரங்கேறி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை அதிகாரப்பூர்வமாகக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அஸ்திவாரம் இங்கிருந்தே தொடங்குகிறது. திரைமறைவில் தேர்தல் வியூகங்களை மட்டுமே கவனித்து வந்த மிதுன் பழனிசாமியை, அதிமுகவுக்குள் கொண்டு வர கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் கூட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மிதுன் பழனிசாமியைத் தலைமை நேரடியாகக் கொண்டு வரவில்லை; மாறாகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் அவரை ஆவலோடு அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை இந்தக் கூட்டங்கள் மூலம் பொதுவெளியில் வெளிக்காட்ட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விரைவில் மிதுன் பழனிசாமி மாவட்ட வாரியாக சில பயணங்கள் மேற்கொள்ளக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா












Click it and Unblock the Notifications