உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை பல்ஸ் பார்க்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக ஆலொசனை கூட்டத்தை நடத்த தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்திலேயே மிதுன் பழனிசாமியை தொண்டர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று வெளிக் காட்டவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சித் தலைமைக்கு எதிராகச் மூத்த தலைவர்கள் சைலண்ட்டாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சி மற்றும் தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்களா என்பதை கணிக்க எடப்பாடி மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டத்தை நடத்த தொடங்கியுள்ளார்.

Edappadi Palaniswami

சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் பொதுக்குழு கூட்டினால் யாருக்கு ஆதரவு இருக்கும் என்று தெரிந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.

பொதுக்குழுவைக் கூட்டினால் அதிருப்தி தலைவர்களால் சலசலப்பு ஏற்படும். இதனால் தனது தலைமைக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் மாவட்ட வாரியாகப் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசி வருகிறார். முதற்கட்டமாகக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் விரிவான ஆலோசனையை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் மூலம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் தனது முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இந்த மாவட்ட வாரியக் கூட்டங்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான ரகசிய திட்டமும் அரங்கேறி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை அதிகாரப்பூர்வமாகக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அஸ்திவாரம் இங்கிருந்தே தொடங்குகிறது. திரைமறைவில் தேர்தல் வியூகங்களை மட்டுமே கவனித்து வந்த மிதுன் பழனிசாமியை, அதிமுகவுக்குள் கொண்டு வர கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் கூட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மிதுன் பழனிசாமியைத் தலைமை நேரடியாகக் கொண்டு வரவில்லை; மாறாகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் அவரை ஆவலோடு அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை இந்தக் கூட்டங்கள் மூலம் பொதுவெளியில் வெளிக்காட்ட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விரைவில் மிதுன் பழனிசாமி மாவட்ட வாரியாக சில பயணங்கள் மேற்கொள்ளக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+