கொடநாடு வழக்கில் என்னை கைது செய்ய போறாங்க.. இப்படி சொன்னாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுகவில் 'பரபர'
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மை கைது செய்ய வாய்ப்புள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பதுதான் அக்கட்சியினரிடையேயான ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
சென்னையில் திடீரென அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார் ஆளுநர். அதேபோல முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி கோரும் கோப்பை பரிசீலனை செய்து வருகிறார் ஆளுநர். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை தாக்கல் செய்த அறிக்கையில்தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதுநாள் வரை திமுக பக்கம் பாய்ந்த நடவடிக்கைகள், பாஜகவுடனான கூட்டணியை முறித்து அதிமுக பக்கம் திரும்புகிறது என்பதற்கான சமிக்ஞைதான் இது எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த பின்னணியில்தான் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கைது நடவடிக்கைகள் வரப் போகிறது.. கவனமாகவும் எதிர்கொள்வோம் என கூறியதாக நேற்று நாமும் செய்திகளைப் பதிவு செய்திருந்தோம். தற்போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மை எந்த நேரத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. என்னையே கைது செய்து சிறையில் அடைக்கும் போது நீங்களும் கவனமாக இருங்கள். எத்தனை பேர் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டுசிறைக்கு போகக் கூடும் என்றெல்லாம் விரக்தியான மனநிலையில் பேசினாராம். இதை பகிரங்கப்படுத்திவிட வேண்டாம் என சொல்லியும் கூட பாஜகவுக்கு நெருக்கமான சில மாஜிக்கள் இந்த தகவலை உடனே டெல்லிக்கும் பாஸ் செய்ய அப்படியே ஊடகங்களிலும் கசியத் தொடங்கிவிட்டது.
ஆனால் கடந்த காலங்களைப் போல, யார் தகவலை கசியவிடுவது? என்றெல்லாம் இப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு விசாரித்து கடுப்பாகவில்லையாம். ஏனெனில் கசியவிடும் 'ஏக்நாத் ஷிண்டே' இன்னார்தான் என தெரிந்தும் 'காட்டமான' நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் 'கடந்து செல்கிறாராம்' எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைவர்களிடையேயான இப்போதைய உரையாடலே எடப்பாடி பழனிசாமி கைதாவார் என பேசியதில் இருந்துதான் தொடங்கவே செய்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications