எப்போதும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: எடப்பாடி பழனிசாமி விளாசல்
சென்னை: மத்திய அரசு எப்போதுமே தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பானமையுடன் தான் நடத்துகிறது என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை செப்டம்பர் மாதமே தெளிவுபடுத்திவிட்டோம். பாஜக உட்பட எந்த ஒரு தேசிய கட்சியுடனும் அதிமுக கூட்டணி வைக்காது. தேசிய கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரோத செயல்களைக் கூட கூட்டணி தர்மத்துக்காக ஆதரிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

தேசிய கட்சிகளை நாம் கூட்டணியில் அங்கம் வைத்து கொள்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். பிறகு தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்படுகின்றனர். இதனால் நமக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால்தான் தேசிய கட்சிகளை நம்பி பயனில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்திலும் வார்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்துள்ளன. அப்போது புயல் வேகத்தில் செயல்பட்டு, புயலின்அடிச்சுவடே இல்லாமல் பணி செய்தோம்.
எப்போதுமே மத்திய அரசு தமிழ்நாடு கேட்கும் நிதியை வழங்குவதே இல்லை. அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் பாஜக ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கான போதுமான நிதியை வழங்குவதில்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
தமிழ்நாட்டை மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தமது கடமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ், தமிழ் என்று பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்தியை மொழிப்பெயர்க்கூடாது என்று நிதிஷ்குமார் கூறிய போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்? மதுரை அதிமுக மாநாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் அறிவித்த மாநாடுதான் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவரால் அறிவித்த தேதியில் மாநாட்டை நடத்த முடியாமல் போயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்











Click it and Unblock the Notifications