Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு போட்ட எடப்பாடி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ரூ 1.10 கோடி நஷ்டஈடாக தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.

கடந்த 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உதயநிதி, இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள்.

Edappadi Palaniswami may upset for speaking against Sanathana Udhayanidhi Stalin replies

எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும்" எனக் கூறியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகிவிட்டது. பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் உதயநிதியின் தலையை சீவினால் ரூ 10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தனது அறிக்கையில் 'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு பட்டியலிப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி எதற்காக ரூ.1.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு போட்டு உள்ளார் என எனக்கு தெரியவில்லை. நான் நிகழ்ச்சியில் இருந்தேன். வழக்கறிஞர்களிடம் கேட்கிறேன். நான் எதுவும் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசவில்லை. ஒருவேளை சனாதனத்தை எதிர்த்து பேசியதால் அவருக்கு மனது கஷ்டமாகி விட்டது என நினைக்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+