ஓபிஎஸ் வருகையால் பட்டென வெளியேறிய சிவி சண்முகம், ஜெயக்குமார் ?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவதை அறிந்த சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.

11 பேர் கொண்ட குழு
11 பேர் கொண்ட இந்த குழு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் புறப்பட்டார். இதை அறிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் வருவதை உள்ளே இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் அறிந்ததாக தெரிகிறது.

ஓபிஎஸ் வருகை
இதையடுத்து ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் வருவதற்குள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது. மேலும் சிவி சண்முகம் முதலில் வெளியே வந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து ஜெயக்குமாரும், வளர்மதியும் வெளியே வந்து புறப்பட்டனர். அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

யாரும் தடை கோர முடியாது
அவர் கூறுகையில் பொதுக் குழு கூட்டத்தில் என்னென்ன நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தோம். அதிமுக பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். யாரும் தடை கோர முடியாது என்றார். அப்போது ஓபிஎஸ் வருவதற்குள் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துவிட்டீர்களே என செய்தியாளர்கள் கேட்டனர்.
Recommended Video

கூட்டம்
அதற்கு ஜெயக்குமார் கூறுகையில் அப்படியெல்லாம் இல்லை. வரும் 18 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை எனும் விஷயம் நடந்தாலும் நடக்கும் நடக்காமலும் இருக்கலாம் என பதில் அளித்தார். ஜெயக்குமார், வளர்மதி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அவசரமாக வெளியேறியதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதிமுக பொதுக் குழுவில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்து ஓபிஎஸ் இன்றைய தினம் கிரீன்வேஸ் சாலையில் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications