நாளை பள்ளிகள் ஓபன்.. திடீரென கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு.. மாணவர்கள் - ஆசிரியர்களே கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 9 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

education-department-issues-guidelines-for-schools-ahead-of-tomorrow-opening-due-to-rain-season
Photo Credit:

காலாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இனி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கும். இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும். அந்த அறைக்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* மழையின்போது பள்ளியின் சுற்றுச்சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+