Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை பள்ளிகள் ஓபன்.. திடீரென கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு.. மாணவர்கள் - ஆசிரியர்களே கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 9 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

education-department-issues-guidelines-for-schools-ahead-of-tomorrow-opening-due-to-rain-season
Photo Credit:

காலாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இனி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கும். இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும். அந்த அறைக்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* மழையின்போது பள்ளியின் சுற்றுச்சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+