Egmore: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவது எப்போது? மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்து வந்தது. இதனால் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக பிளாட்பார்ம் 10 மற்றும் 11-ல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6 வது வழித்தடத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் சேவை குறைத்து இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மிக முக்கிய ரயில் நிலயங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில் நிலையத்தில் பூந்தமல்லி சாலையை நோக்கி உள்ள பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 10 மற்றும் 11 கடந்த மாதம் முதல் மூடப்பட்டது.
புறநகர் மின்சார ரயில்கள் இந்த ரூட்டில் தான் இயக்கப்பட்டு வந்ததால், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நடைமேடை 5 மற்றும் 6-ல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், ரயில் சேவை குறைப்பு, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் சிக்னல்களுக்காக நிறுத்துவது என கடந்த ஒரு மாத காலமாக ரயில் நிலைய பயணிகளை அல்லோலப்படுத்தி வருகிறது தெற்கு ரயில்வே.
எப்போது முடிவடையும்?
ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் முடித்து எப்போது பழையபடி மின்சார ரயில்கள் இயக்கப்படுமோ என்ற ஆவலுடன் எழும்பூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் பயணிகள் நினைக்காத நாளில்லை என்று சொல்லும் அளவிற்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் இந்த பணிகள் முடிக்கப்படும் ரயில்வே அறிவித்து இருந்தது. இதன்படி பணிகளை முடிக்க தொழிலாளர்கள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்து ரயில்வே பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
நடைமேடையில் கூடுதல் வசதிகள், பார்சல் எடுத்து செல்வதற்கான நடை மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. ரயிலை இயக்குவதற்கான அனைத்து இறுதி கட்ட பணிகளும் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடைமேடையை சுத்தம் செய்யும் பணிகள், நகரும் படிக்கட்டுகளை சோதனை செய்வது, அறிவிப்பு பலகை வைப்பது என பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், மின்சார ரயில்கள் சேவை விரைவில் சீராகும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் 10, 11-ல் இருந்து மின்சார ரயில்கள் இயக்கும் வகையிலான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. சிறு சிறு பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.
எப்போது மின்சார ரயில்கள் இயக்கப்படும்?
5 ஆம் தேதிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்க முடியும். ரயில் நிலையத்தில் எஞ்சிய பணிகள் நடக்கும் போது ரயில் சேவையில் பாதிப்பு இருக்காது. இதனால், பயணிகளுக்கு இனி இடையூறு ஏற்படாது" என்று தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகளின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications