ரணகளத்தில் ஒரு குளுகுளு.. தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு.. அதிருமா போர் முழக்கம்?
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற, வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், வேண்டிய தொகுதிகள் கிடைக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது மட்டுமின்றி, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறது.

தற்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்த சூழலில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று தேமுதிக கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொடக்க காலம் முதல் முரசு சின்னத்தில் போட்டியிட்டு வரும் தேமுதிகவுக்கு இந்த தேர்தலிலும் முரசு சின்னம் கிடைத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் இந்த முரசு சின்னம் ஒதுக்கீடு என்பது பொருந்தும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பாமகவுக்கு அதன் மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தனித்து போட்டியிடுவதா?, கூட்டணி வைப்பதா? என்பதில் இன்னமும் தேமுதிகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், விரைவில் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications