முடிவுகள் மாறுமோ? வேலூர், விருதுநகர்.. 20 வாக்குச் சாவடி வாக்குகளை சரிபார்க்க பாஜக,தேமுதிக மனு!
சென்னை: வேலூர், விருதுநகர் லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 20 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விவரங்களை சரி பார்க்க வேண்டும் என பாஜக மற்றும் தேமுதிக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 14 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என தேமுதிக மனு அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் ஆணையம் ஜூன் 1-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சர்பார்க்கக் கோரி, மக்களவைத் தேர்தல் தொடர்பாக 8 மனுக்களும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பாக 3 மனுக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து 20 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்களை சரி பார்க்கக் கோரி பாஜக, தேமுதிக தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் லோக்சபா தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே வி குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டசபை தொகுதிகளில் தலா 1 வாக்குச் சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என பாஜக மனு கொடுத்துள்ளது. வேலூரில் பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இத்தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் 2- வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல விருதுநகர் லோக்சபா தொகுதியில், விருதுநகர் சட்டசபை தொகுதியில் மட்டும் 14 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திர விவரங்கள் சரி பார்க்கப்பட வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிகவின் விஜய பிரபாகர் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இத்தொகுதியில் வென்றிருந்தார்.
இதேபோல தெலுங்கானாவில் ஜஹிரபாத் லோக்சபா தொகுதியில் 20 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்கு விவரங்களை சரிபார்க்க பாஜக மனு கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் இத்தகைய மனுக்களை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications