Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கட்சிகள் இணைந்துள்ள பெரிய கூட்டணி என்பதால் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை முடித்து இன்றுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தலை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு ஆரம்பத்தில் 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.
பின்னர் சில பேச்சுவார்த்தைகளில் 10 தொகுதிகள் வரை வழங்கும் முன்மொழிவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அக்கட்சியின் பொருளாளர் எல்கே சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது கூட்டணி கட்சிகளின் கண்ணை உறுத்தியுள்ளது.

திமுக கூட்டணி
தேமுதிக தவிர்த்து ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. அவற்றில் காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் 28 தொகுதி
மொத்தமாக சுமார் 26 கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக சார்பில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
இதற்கிடையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து கூட்டணிக்குள் சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கோரியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனியர் குழு
அதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் திமுக தலைமையகம் அதிருப்தி அடைந்து, கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மூத்த பேச்சுவார்த்தை நடத்தும் சீனியர் குழுவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி சமரசம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள்
அந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 6 தொகுதிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளுக்கும் சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுக்கு தலா 4 தொகுதிகள் வழங்க திமுக தலைமையகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிமுக
ஆனால் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் அந்தக் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதி எண்ணிக்கை மாற்றமடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக தானாகவே போட்டியிடும் தொகுதிகள் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. திமுக 160 தொகுதிகளுக்கு குறையாமல் நேரடியாக போட்டியிடவும், கூட்டணி கட்சிகள் உட்பட உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகள் வரை களமிறங்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் தேர்தல் திட்டம்
எனவே கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடித்து இன்றுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய திமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் கூட்டணி பங்கீடு முடிவு செய்யப்பட்டால் தமிழக தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை இறுதி செய்த கட்சியாக திமுக முன்னணியில் நிற்கும். எதிர்முகாமான அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கவேயில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா!












Click it and Unblock the Notifications