குடும்பமா? அரசியலா? 4 மணிக்கு மகளின் நிச்சயதார்த்தம்..காரிலேயே பரபரப்பாய் சுற்றிய செல்வப் பெருந்தகை!
சென்னை: தமிழக அரசியலில் தற்போதைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது தான். கிட்டத்தட்ட கூட்டணி முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் கூட்டணியை எப்படியாவது தொடர வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப் பெருந்தகை. அவரது மகளின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நான்கு மணிக்கு நடைபெறுவதாக பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுத்த நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்காக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்குமாக அலைந்து வருகிறார் செல்வப் பெருந்தகை.
வழக்கம்போல கடைசி கட்டத்தில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து நீடித்து வரும் இழுபறி இன்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குடும்ப சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபுறம் தனது மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் என இரு முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் நேரிட்டதால், அவர் கடுமையான அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் இன்று மாலை 4 மணிக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய கடைசி நாள் என்பதால் அரசியல் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தரப்பில் மார்ச் 3 ஆம் தேதிக்குள் இறுதி முடிவு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை முதலே மிகத் தீவிரமாக பேச்சு நடத்தி வந்தார் செல்வப் பெருந்தகை.
செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம்
2026ல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை உடன் இணைந்து ஆலோசனை நடத்தினர். காலை சுமார் 11.40 மணியளவில் சிதம்பரத்தின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. திமுகவுடன் தொடர வேண்டுமா, அல்லது வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டுமா என்பது குறித்து விரிவான பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க நேரம் பெறப்பட்டிருந்தது.
மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு
சுமார் 12.25 மணியளவில் சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் அங்கிருந்து கிளம்பி சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தை 12.40 மணிக்கு அடைந்தனர். இருவரும் முதல்வருடன் அரைமணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். திமுக தரப்பில் 27 முதல் 28 தொகுதிகள் வரை வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் காங்கிரஸ் டெல்லி தலைமை 39 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது என கூறப்படுகிறது. இந்த வித்தியாசமே கூட்டணி முடிவை தாமதப்படுத்தி வருகிறது. திமுக விதித்த கெடு இருந்தபோதிலும், காங்கிரஸ் தரப்பில் இன்னும் இறுதி நிலைப்பாடு எடுக்கப்படவில்லை.
ப.சிதம்பரம்
காங்கிரஸின் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பு திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த அணியில் செல்வப்பெருந்தகையும் ப.சிதம்பரமும் முக்கியமாக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தரப்பு, அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும் என்ற மனநிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசியல் சூழ்நிலையிலேயே செல்வப்பெருந்தகையின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
ப சிதம்பரம் ஆலோசனை
இன்று மாலை 4 மணிக்கு மகளின் நிச்சயதார்த்தம் தொடங்கவிருந்த நிலையில், அதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தபோதும் செல்வப் பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இன்றுக்குள் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை எட்ட வேண்டும் என்ற அவசரத்தால் அவர் அங்குமிங்கும் சென்று ஆலோசனையில் பங்கேற்றார். கூட்டணி ஒரு முடிவை நோக்கி நகர்ந்துள்ளது என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் இறுதி முடிவு இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பேச்சுவார்த்தைகளுகிடையே செல்வப் பெருந்தகை கடைசி நேரத்தில் தான் மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
ஸ்ரீகாந்தி, ஜிகே மணி, அருள்.. பாஜகவிடம் 5 சீட் கேட்கும் ராமதாஸ்.. மாம்பழம் சின்னத்திற்கும் செக்! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
விரைவில் சட்டசபை தேர்தல்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை! -
சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
பெரம்பூர் தொகுதி.. விஜய்யை எதிர்க்க தயாராகும் ஆளூர் ஷா நவாஸ்? சென்னையில் களமிறங்கும் விசிக! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 7/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்களின் அனல் கருத்துகள் -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ்














Click it and Unblock the Notifications