சென்னையில் 400 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.. பரபர தகவல்
சென்னை: சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ தங்ககட்டிகள் சிக்கி உள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்களை வினியோகம் செய்வததை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புள்ள புதிய பொருட்களை எடுத்து சென்றால் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினால் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று சென்னை குன்றத்தூரில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அப்போது 2 மினிலாரி வந்தது. மினிலாரிகளை தடுத்து பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
கோடி கோடியாக சிக்கிய பணம்.. சென்னையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
அப்போது மினிலாரியின் உள்ளே 400 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் டிரைவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து 400 கிலோ தங்க கட்டிகளோடு, 2 மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாகன சோதனையில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் மீட்பது எப்படி? ரொம்ப முக்கியம்
மேலும் சம்பவம் தொடர்பான வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த தங்கக்கட்டிகள் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் சென்னை கொண்டு வந்ததும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மினிலாரியில் மண்ணூரில் உள்ள குடோனுக்கு எடுத்து சென்றபோது பறக்கும் படையிடம் சிக்கியதும் தெரியவந்தது.
ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? தேர்தல் நடத்தை விதியால் கட்டுப்பாடு! உஷார் மக்களே
அதாவது தனியார் நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பல்வேறு நகைக்கடைகளுக்கு தங்கக்கட்டிகளை சப்ளை செய்து வருகிறது. இவர்கள் வெளிநாட்டில் இருந்து தங்க கட்டிகள் வாங்கிய நிலையில் குடோனுக்கு எடுத்து சென்றபோது வாகனம் சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 400 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மினிலாரி டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications