சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லோக்சபத தேர்தலில் 2ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

தொடங்கியாச்சு... வேட்பு மனு தாக்கல்... தமிழகத்தில் ஒரே நாளில் 20 பேர் மனு தாக்கல் தொடங்கியாச்சு... வேட்பு மனு தாக்கல்... தமிழகத்தில் ஒரே நாளில் 20 பேர் மனு தாக்கல்

4 பேர் மட்டுமே அனுமதி

4 பேர் மட்டுமே அனுமதி

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சுற்றியும் 100 மீட்டர் தூரம் வரை கூட்டமாக வரக்கூடாது என்றும், அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்துக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளனர்.

செலவின பார்வையாளர்கள்

செலவின பார்வையாளர்கள்

இந் நிலையில் சென்னை மாவட்டத்தில் 3 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 தொகுதிகளுக்கும் தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வடசென்னை பார்வையாளர்கள்

வடசென்னை பார்வையாளர்கள்

அதன்படி, வடசென்னை லோக்சபா தொகுதிக்கு சஞ்ஜீவ் குமார் தேவ், விவேகானந்த் மெளரியா ஆகிய இருவரும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தென் சென்னை தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை பார்வையாளர்கள்

தென்சென்னை பார்வையாளர்கள்

தென்சென்னை தொகுதிக்கு எம்.நவீன், பி.எல். குருபிரசாத் ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக செயல்படுவர். மத்திய சென்னை தொகுதிக்கு ஆர்.எம்.முஜூம்தர், வி.என். மங்கராஜு ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Election observers were appointed in 3 lok sabha constituencies in chennai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X