அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்துடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

Electoral ink will be applied to the centre finger for 4 constituencys byelections

இந்த நிலையில் நிலுவையில் இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், எம்எல்ஏ உயிரிழந்த சூலூர் தொகுதிக்கும் வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 4 தொகுதி மக்களும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களிக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. மேலும் மே 19-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

இதை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் சத்யபிரதசாஹூ நடத்திய ஆலோசனையில் குறிப்பிட்டார். அப்போது தமிழகத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாக சில கிராமத்தினர் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை வாக்களிக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக சாஹூ தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+