Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம்.. ஒரேடியாக எகிறிய மின்கட்டணம்.. நிலுவை தொகைக்கு அபராதமா? தமிழ்நாடு அரசு முடிவு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வரும்நிலையில், இன்னொரு கோரிக்கையும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த வருடம் செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது.. இந்தநிலையில், மத்திய அரசு மின் கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்தது.

கட்டண உயர்வு: இதையடுத்து, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இதனை தமிழக அரசும் அமல்படுத்தியது. அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

 Electricity Board has Electricity tariff hike and what did Power Weavers say about EB Bill

வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது என்றாலும், வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

விசைத்தறி தொழிலாளர்கள்: குறிப்பாக, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருத்த அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.. காரணம், 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகிறார்கள்.. இதன் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகின்றன.. இந்த விசைத்தறிகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டதால், ஏற்கனவே நலிவடைந்துள்ள தொழிலாளர்கள், மேலும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

அடுத்த கோரிக்கை: அதனால் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் மாதம் மின்கட்டணம் குறைக்கப்பட்டது என்றாலும், விசைத்தறி மின் கட்டணத்தை கடந்த 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர், சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரிடம் இந்த மனுவை வழங்கியுள்ளார்..

அந்த மனுவில், "மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை அரசும் விரைவில் பரிசீலிக்கும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+