''நான் இல்லாவிட்டால் காசி விஸ்வநாதரை யார் இசை கொண்டு எழுப்புவது?'' பிஸ்மில்லா கான் பற்றிய X பதிவு!
சென்னை: ஞானவாபி மசூதி விவகாரத்தில் ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் குறித்த ஒரு நெகிழ்ச்சி பதிவை Truth Voice of people என்ற எக்ஸ் சமூக வலைதளப்பக்கம் பகிர்ந்துள்ளது.
அதில், ''நான் இல்லாவிட்டால் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் யார் இசை கொண்டு எழுப்புவார்கள்..?'' என உஸ்தாத் பிஸ்மில்லா கான் கேட்டது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

''எத்தனை செல்வந்தர்கள் அழைத்த போதும், எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் அழைத்த போதும் எங்குமே செல்ல மறுத்து வாரணாசியிலேயே ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து மறைந்த பாரதரத்னா விருது பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தன் மறுப்புக்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா..?''
"நான் இல்லாவிட்டால் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் யார் இசை கொண்டு எழுப்புவார்கள்..?''. ''அந்த பிஸ்மில்லா கானும் இதே ஞானவாபி மசூதியில் தானே தொழுகை நடத்தியிருப்பார். அழகான மதம் கடந்த பாரம்பரியத்தை இந்து மதத்தின் பெயரால் சுக்கு நூறாக உடைத்தது தான் சங்கி கூட்டம் செய்த ஒரே சாதனை.''
"நீங்கள் கெட்டழிந்து போகவேண்டும்" என்று சபிக்க நா துடிக்கிறது. அப்போதும் இடைமறித்த உஸ்தாத் "எல்லா ஆட்டங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அதுவரை பொறுத்திரு. இது மனிதனுக்கு அழகல்ல" என்பது போல் ஷெனாயை எடுத்து தனது மெல்லி இசையை வாசிக்கத் தொடங்கிவிட்டார். நாம் எல்லோரும் கொஞ்ச நேரம் பிஸ்மில்லா கான் இசையில் அமைதிகொள்வோம் தோழர்களே.- களப்பிரன் முகநூல் பதிவு'' இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications