இதோ ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! ரூ.225 கோடி மோசடி வழக்காம்
சென்னை: தனியார் நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக இன்று சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பதிவு செய்து இருக்கும் வழக்கின் அடிப்படையில் இன்று சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனையை தொடங்கி உள்ளார்கள்.

நிறுவனத்துக்கு தொடர்புடைய 13 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications