Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறை வரலாற்றில் முதல்முறை.. டாஸ்மாக் கேஸ்.. ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் மன்னிப்பு கேட்ட ED

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். டாஸ்மாக் வக்கீல் தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அமலாக்கத்துறை வரலாற்றில் முதல்முறையாக உதவி இயக்குநரே மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனிடம் ஆவணங்களை பறிமுதல் செய்ததற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நீதிமன்ற உத்தரவை மீறி சம்மன் அனுப்பிய விவகாரத்தில், ஒரு உதவி இயக்குநர் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரி உட்பட மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் முன்பு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில்தான் இன்றுஅமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விகாஷ் குமார் - மதுபான வழக்கு

ரூ.1,000 கோடி டாஸ்மாக் மதுபான ஊழல் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட பணமோசடி வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்த நீதிமன்ற இடைக்கால உத்தரவை அமலாக்கத்துறை மீறியதே இந்த அவமதிப்புக்குக் காரணம். இந்த உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

Enforcement directorate apologies for taking evidence from Akash Baskaran in Tasmac case

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் விகாஸ் குமார், தீர்ப்பளிக்கும் அதிகாரி மற்றும் பதிவாளர் ஆகியோர் டிசம்பர் 15 அன்று (இன்று) ஆஜராகுமாறு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் அதிகாரிகள் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் வியப்புடன் வினவினர். "சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு அனுப்பப்பட்ட அசல் சட்டப்பூர்வ அறிவிப்பு அவர்களின் தனிப்பட்ட ஆஜரை கட்டாயப்படுத்தி உள்ளது. இதன்படி அவர்கள் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை?" என்று அமர்வு கேள்வி எழுப்பியது.

இது, டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதுபான ஊழல் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதி. இவ்வழக்கில், அமலாக்கத்துறை திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தது.

சீல் வைக்கும் அதிகாரம் இல்லாத அமலாக்கத்துறை

அலுவலகங்களைப் பூட்டி சீல் வைக்கும் அதிகாரம் இல்லாத அமலாக்கத்துறைக்கு, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆகாஷ் பாஸ்கரனிடம் திருப்பித் தருமாறும், அவற்றின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுகளை மீறி அமலாக்கத்துறை பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியது. இதனால், ஜூலை 23 அன்று உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், தேவைப்பட்டால் அவமதிப்பு மனு தாக்கல் செய்ய பாஸ்கரனுக்கு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையிலேயே அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டார் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அமலாக்கத்துறை வரலாற்றில் முதல்முறையாக உதவி இயக்குநரே மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+