தங்கம் விற்ற நாதெள்ளா ஜூவல்லரி.. எல்லாமே காலி.. 163 கோடி சொத்தினை வங்கியிடம் ஒப்படைத்த அமலாக்கத்துறை
சென்னை: சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில் எஸ்பிஐ வழக்கின் பேரில், முடக்கப்பட்ட ரூ.163 கோடி சொத்துகளை வங்கியிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது.
சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.250 கோடி முதல் ரூ.380 கோடி வரை கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படி கடன் வாங்கிய போது, வங்கிகளுக்கு தவறான நிதிநிலை அறிக்கைகளையும், போலி ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கடனுக்கு ஈடாக அடமான வைக்கப்பட்ட சொத்துக்களையும், இருப்புகளையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வங்கியில் வாங்கிய கடனை அந்த நிறுவனம், சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்காகவும், நிறுவனத்தின் அன்றாட செலவுகளுக்காகவும் பயன்படுத்தியாகவும் புகார் எழுந்தது. ஆனால், வங்கிகளுக்குத் தெரியாமல் இந்த நிதி வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நிறுவனம் கிளைகளை மூடியது. வாடிக்கையாளர்கள் நகை சீட்டு திட்டங்களில் கட்டிய பின்னர், பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
பல கோடிகளில் நடந்த இந்த மோசடி குறித்து கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கில் நாதெள்ளா ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான 37 அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் அதே நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், 'எஸ்.பி.ஐ. வங்கிக்கு நாதெள்ளா நிறுவனத்தின் மூலம் வரவேண்டிய கடன் தொகை ரூ.163.85 கோடியை பெறும் வகையில் அமலாக்கத்துறை முடக்கம் செய்த அந்நிறுவனத்தின் 37 சொத்துகளில் 27 சொத்துகளை விடுவிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, ரூ.163.85 கோடி மதிப்பிலான நாதெள்ளா நிறுவனத்தின் 27 சொத்துகளை எஸ்.பி.ஐ. வங்கி வசம் ஒப்படைத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
-
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications