Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் வழக்கு.. திடீரென வேகத்தை அதிகரித்த அமலாக்கத்துறை.. புள்ளிகளை இணைக்க முடிவு? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் அமலாக்கத்துறை தீவிரமாக ரெய்டு நடத்தியது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை முக்கியமான அதிகாரிகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக்கிற்கு மதுபான சப்ளை செய்ததில் பல ஆயிரம் கோடி வரை அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் என்று கூறப்படும் ஆவணங்களை கைப்பற்றியது.

டாஸ்மாக் வழக்கு

இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், சிவா டிஸ்டிலரீஸ் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில் பல உண்மைகளை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

Enforcement directorate increases its speed in TASMAC Case What will happen next

இந்த தகவல்களின் அடிப்படையில், டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை. டாஸ்மாக் எம்.டி. விசாகன் ஐ.ஏ.எஸ், பொது மேலாளர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் நேரடி விசாரணையை தொடங்குவதற்கு முன்பு, மதுபான உற்பத்தி நிருவனங்களிடம் விசாரணை நடத்துவதற்காகத் தான் சிவா டிஸ்டலரிஸ் நிறுவனத்தினரிடம் இன்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர் என்கின்றனர்.

டாஸ்மாக் வழக்கு பெண் அதிகாரிகள்

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017 முதல் 2024 ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல்கள் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அந்த விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சோதனை என்பது ஆரம்பக்கட்ட நடவடிக்கை தான். அதனால் டாஸ்மாக் நிர்வாகம் நிவாரணம் கோரி அமலாக்கத் துறையை நாடலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், சோதனை உத்தரவில், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அது அவர்களின் கடமை. சோதனைக்கான உத்தரவு நகலை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை நிர்ணயம், பார்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக 100 கேள்விகள் எழுப்பி வாக்குமூலங்கள் பதிவு செய்து கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது சம்மந்தமாக டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் குற்றச்சாட்டவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக, அரசு யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டி உள்ளது. சட்டத்தின்படி தான் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வலுக்கட்டாயமாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+