Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்! சல்லடை போட்டு சலிக்கும் அமலாக்கத்துறை! லஞ்ச் நேரத்தில் வைத்த பஞ்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குள்ளேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக அல்லவா இருக்கிறது என சீனியர் அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் நொந்து போயிருக்கின்றனர்.

Enforcement officers raided the Secretariat of Tamil Nadu

ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கக்கூடிய காலத்திலேயே அதுவும் அவர் இன்று காலை கூட கோட்டைக்கு வந்திருக்கக் கூடிய சூழலிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவதற்காக தலைமைச் செயலகம் வந்தது சீனியர் அமைச்சர்கள் மத்தியில் ஜீரணிக்க முடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம், அவரது தம்பி அசோக் இல்லம் மற்றும் அவர்கள் இருவருக்கும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை வந்ததற்கு காரணம் நிலக்கரி இறக்குமறி விவகாரம் தொடர்பான ஆவணங்களுக்காக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லஞ்ச் நேரத்தில் சாப்பிடுவதற்காக டிஃபன் பாக்ஸ்களுடன் புறப்பட்ட செந்தில்பாலாஜி அலுவலக ஊழியர்கள், அமலாக்கத்துறையினர் வருகையால் சாப்பிடக் கூட செல்லவில்லை. இதனிடையே சோதனை நடைபெற்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமைச் செயலகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முதல்வரும் தனது அலுவல் பணிகளை முடித்துக்கொண்டு கோட்டையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட பிறகே இந்த ரெய்டு தொடங்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+