10ம் வகுப்பு முடிவு.. அதிகபட்ச தேர்ச்சி ஆங்கிலத்தில் தான்! மொழிப்பாடத்தில் குறைவு! கணிதத்தில் எத்தனை
சென்னை: இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவ மாணவியருக்கு 10ஆம் வகுப்பு என்பது ரொம்பவே முக்கியமானது. அதுவரை இறுதி தேர்வு என்பது பள்ளி அளவிலேயே நடத்தப்படும். ஆனால் 10ஆம் வகுப்பில் தான் முதல்முறையாகப் பொதுத்தேர்வாக மாநிலம் முழுக்க நடத்தப்படும்.

மேற்படிப்பிற்கு மாணவர்கள் எந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதையும் 10ஆம் வகுப்புத் தேர்வில் ஓரளவுக்குத் தெரிந்துவிடுகிறது. அதன்படி இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
10ஆம் வகுப்பு தேர்ச்சி: கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 9.76 லட்சம் பேர் இந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதற்காக மாநிலத்தில் சுமார் 4000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுகள் முடிந்த பிறகு வழக்கம் போல மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் நடைபெற்றன. அவை அனைத்தும் முடிந்த நிலையில், இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல இதிலும் மாணவர்களை விட மாணவிகளே 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16ஆகவும் இருக்கிறது.
அதேபோல மாவட்ட ரீதியாகப் பார்க்கும் போது 97.67 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிவகங்கை (97.53) மாவட்டம் இரண்டாம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் (96.22%) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதற்கிடையே பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது.
பாடம் வாரியாக: அதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கில பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்துள்ளது. முன்பெல்லாம் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறுவதே கடினம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது நிலைமை அப்படியே மாறி மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து சமூக அறிவியல் பாடத்தில் 95.83% பேரும் அறிவியல் பாடத்தில் 95.75% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அனைவருக்கும் கடினமான பாடமாகக் கருதப்படும் கணித பாடத்தில் இந்தாண்டு 95.75% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மொழிப்பாடத்தில் குறைந்தபட்சமாக 95.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications