எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்! விஜய்க்கு எதிராக இணையும் திராவிட கட்சிகள்.. பத்திரிகையாளர் பகீர்
சென்னை: ஆட்சியமைக்க விஜய் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக இணைந்து விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த பத்திரிகையாளர்கள் இப்படி சொல்லியிருப்பது தமிழக அரசியல் களத்தில் அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த வெற்றி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை. விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் எனில், இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதுவரை இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் விஜய் உடன் செல்வது குறித்து பாசிட்டிவாக பேசவில்லை. எனவே விஜய் முதலமைச்சர் ஆவது தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர பிளான் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மூத்த பத்திரிகையாளர்களே இதை தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தனியார் செய்தி ஊடகத்தின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம். இந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகலாம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "தவெகவை ஆளுநர் அழைத்து ஆட்சி அமைக்க சொல்லலாம். ஆனால், இதே நிலை நீடித்தால் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் அவரால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே அடுத்த பெரிய கட்சியான திமுகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications