“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு
சென்னை: "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்திருந்ததாக வெளியான தகவலை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து தண்டனை பெற்றுத் தருவோம்" என திருவண்ணாமலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தருமபுரியில் பேசுகையில், "கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார்" எனப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, "முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது. கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம், அவருடைய பிள்ளை நான்" என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
மேலும், எடப்பாடியின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகொ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை கண்ணியக்குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து கண்டறிந்து, அப்படி வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்" எனக் கூறியுள்ளார்.
-
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications