அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டு.. அன்னதானம் வழங்கும் ஈபிஎஸ் அணி
சென்னை: அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டாகும் நிலையில் நினைவு நாள் கொண்டாடப்படும் என எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் விசுவாசமிக்க தொண்டரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதியும், கழகத் தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்துக் கொண்டாடிய மூத்த முன்னோடியும், கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவராகப் பணியாற்றியவர் மதுசூதனன்.

அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 5.8.2022-வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகத்தின் சார்பில், தண்டையார்பேட்டை, செல்வ வாணிமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் கழக மகளிர் அணிச் செயலாளர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் அதிமுக செயலாளர் நா.பாலகங்கா அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் தலைமையில் மதுசூதனன் அவர்களுடைய திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நாள் முழுவதும் மேற்படி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.S. ராஜேஷ் அவர்கள் மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications