துப்பாக்கி முனையிலும் கூட திமுக தொண்டராகவே மரணிப்பேன்.. பாஜகவுக்கு தாவமாட்டேன்: பூங்கோதை ஆலடி அருணா
சென்னை: துப்பாக்கி முனையிலும் திமுகவின் தொண்டராகவே மரணிப்பேனே தவிர பாஜகவுக்கு தாவ மாட்டேன் என்று திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம், பாஜகவுக்கு தாவியதைத் தொடர்ந்து பலருக்கும் அந்த கட்சி குறிவைத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவும் பாஜகவில் ஐக்கியமானார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 பொய்களும்... கோவை முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட சிலரது பெயரை குறிப்பிட்டு பாஜகவுக்கு தாவப் போகிறார்கள் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக பூங்கோதை ஆலடி அருணா எச்சரிக்கை விடுத்த நிலையில் இது தொடர்பாக பதிவிட்ட பாஜகவினர் மன்னிப்பும் வருத்தமு தெரிவித்தனர்.
இதனை மேற்கோள்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூங்கோதை ஆலடி அருணா, மிக கேவலமான பொய் செய்திகளை பரப்புகின்றனர். திமுகவைத்தான் சுவாசிக்கிறேன்! துப்பாக்கி முனையில் நிறுத்தினாலும் நான் திமுகவின் தொண்டராக மரணிப்பேனே தவிர கட்சி மாறமாட்டேன் என ஆக்ரோஷமாக குறிப்பிட்டிருக்கிறார்.
பூங்கோதை ஆலடி அருணாவின் திட்டவட்டமான இந்த பதிவை திமுகவினர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.