பேனா பிடிக்கும் கையால் தடியை பிடிக்க தயார்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடி
சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேனாவை பிடித்து கையெழுத்திடும் கையால் தடியை பிடிக்கவும் தயார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் இந்த தடாலடி கருத்தை செய்தியார்களிடம் கூறினார். மேலும், குடியுரிமை சட்டத்தை தமிழர்கள் யாரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றும், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் சகோதரத்துவத்துடன் தமிழகத்தில் பழகி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அதற்கு ஆதரவு கிடைக்காது என்பது தான் உண்மை நிலை என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பாக ஒரு வாரத்திற்கு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் நிலையில், வெறுமனே கையெழுத்து இயக்கம் தானே என அலட்சியம் கொள்ள வேண்டாம் என்றும், பேனாவை பிடித்து இன்று கையொப்பம் போடும் கைகள் தடியை பிடிக்கவும் தயங்காது, பிடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளை பற்றி விமர்சித்த அவர் பட்ஜெட் யாருக்கும் பயனளிக்காத ஒன்று எனவும் விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கலந்துகொண்டார்.
தமிழர்கள் யாரையும் பிரித்து பார்க்காதவர்கள் என்றும், வன்முறையால் தான் குடியுரிமை சட்டத்தை திருத்த முடியும் என்றால் அதற்கும் தயங்கமாட்டோம் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பொறுத்தவரை சற்று தடாலடி கருத்துக்களை கூறுவது அவரது வழக்கம்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications